|
:: 24 நேர செய்திகள் [Etamil24.com] ::
|
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி
:
|
|
தாம் உண்ணாவிரதம் இருந்தபோது மக்டொனால்ஸ் பேகரை சாப்பிட்டதாக பொய்யான செய்திகளை வெளியிட்ட பிரித்தானிய பத்திரிகைகளான, டெய்லி மெயில், சன் பத்திரிகை மீது பரமேஸ்வரன் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் இவ் இரு பத்திரிகைகளும் பொய்யான செய்திகளை வெளியிட்டதை ஒப்புக்கொண்டு மன்னிக்ப்புக் கோரியுள்ளனர். தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திய இவ் இரு பத்திரிகைகளும், பகிரங்கமாக மன்னிப்புக்கோரியுள்ளது.
|
|
வன்னி பற்றிச் சொல்கிறார் உதவும் கரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்
:
|
|
இறைவா இதென்ன சோதனை சொந்த மண்ணில் தமிழர்கள் உடுத்த துணியில்லாமல், குளிக்க நீர் இல்லாமல் நோய் தீர்க்க மருந்தில்லாமல், கூரையில்லா வீடுகளில் விலங்குகள் போல் அடைபட்டு, அடிபட்டு வாயிருந்தும் ஊமைகளாய், அடிமைகளாய், உயிர் வாழும் தமிழர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்காமல் திரும்பத்தான் முடியுமா? இவ்வாறு கூறினார் விஜயன் சுப்பிரமணியம் எனும் உதவும் கரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்.
பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தினம் வரும் செய்திகளையும் படங்களையும் பார்த்து பல நாட்கள் நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். அண்மையில் சி.என்.என் [...]
|
|
போர்க் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும்-அமெரிக்கா
:
|
|
போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகவும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நியூயோர்க்கில் ஐ.நா. வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருப்பதாவது;
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலைக்காக சூடானின் ஓமர் அல் பாசிரை உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டிய சில நாட்களின் பின்னர் பாசிர் மீதான குற்றச சாட்டானது தனது பணியை கடினமானதாக மாற்றியுள்ளதாக சூடானுக்கான [...]
|
|
தமிழ் அரசியல் கைதிகள் பௌத்த பீடாதிபதிகளுக்கு உருக்கமாக கடிதம்
:
|
|
எங்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி உட்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எங்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அல்லது பிணை கிடைக்க வழி செய்யுங்கள்.
இப்படி உருக்கமாகக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் பௌத்த பீடாதிபதிகளுக்கு கடிதங்களை அனுப்பி உள்ளார்கள்.
மல்வத்தை பீடாதிபதி,அஸ்கிரிய பீடாதிபதி, சியம்ப பீடாதிபதி ஆகியோருக்கு நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் சார்பாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளால் இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
|
|
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது
:
|
|
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள்.
அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி [...]
|
|
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியவர்களின் பெயர்களை தேர்தல் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை
:
|
|
யாழ்ப்பாணததை விட்டு வெளியேறியவர்களின் பெயர்களை தேர்தல் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறிய யாழ்ப்பாண வாக்காளர்களின் பெயர்களை இடாப்பிலிருந்து நீக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தேர்தல் செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 722000 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 816000 மாக [...]
|
:: சினிமா செய்திகள் ::
|
மும்பை தாக்குதல் சம்பவம்தான் கோ
:
|
|
கனா கண்டேன், அயன் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்தின் புதுப்படம் கோ. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் ஜரூராக நடந்துக்கொண்டு வருகிறது. படத்தின் கதை மும்பை தாக்குதல் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. 2008ல் மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் அட்டாக்கில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர். அதை கதைக் கருவாக கொண்டு உருவாக்கிய படம் கோ. ஜீவா புகைப்படக்காரராக நடித்திருக்கிறார். பிரபல பத்திரிகையில் புகைப்படக்காரராக வரும் அவர் எடுக்கும் புகைப்படங்களே முக்கிய சாட்சியாக தீவிரவாதிகளுக்கு எதிராக அமைய, [...]
|
|
நயன்தாராவின் மதிலுகள்கப்புறம்
:
|
|
தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன், மலையாளத்தில் எலெக்ட்ரா, கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இடையில் வந்த பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை. குறிப்பாக இந்தி பாடிகார்ட் ரீமேக்கில் சல்மான் கானுடன் நடிக்கவும் தமிழில் ஒரு படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவும் நயன்தாராவிடம் கேட்கப்பட்டது. அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் மலையாளத்தில் உருவாகும் மதிலுகள்கப்புறம் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் நயன். தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நயன்தாராவை நடிக்க [...]
|
|
பஞ்சாபி இளைஞருக்காக காத்திருக்கும் பிரியங்கா சோப்ரா
:
|
|
பேஷன் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, பஞ்சாபி இளைஞரை மணமுடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது 28வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அளித்த பேட்டியில் பிரியங்கா கூறியது இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்வேன், மணமகனாக எனக்கு பிடித்த பஞ்சாபி இளைஞரை தேர்ந்தெடுப்பேன். அவர் உடல் வலிமை மிக்கவராகவும், நல்ல மனம் கொண்டவராக இருக்க வேண்டும். நான் திரையுலகை சேர்ந்தவள் என்பதால் என்னைப் பற்றி வெளியாகும் சர்ச்சைகளை [...]
|
|
புதிய பறவைக்கு திரண்ட கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் – பிரபு
:
|
|
சிவாஜி, சரோஜாதேவி ஜோடியாக நடித்து 1964-ல் வெளிவந்த படம் புதிய பறவை. கடந்த வெள்ளியன்று சிவாஜியின் 9-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டபோது இப்படத்தை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிட்டனர். இதையொட்டி தியேட்டரை சிவாஜி ரசிகர்கள் கொடி, தோரணங்களால் அலங்கரித்தனர். 40 அடி உயர கட் அவுட்டும் நிறுவினர். படத்தை பார்க்க சிவாஜி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்தனர். முதல் இரு நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பி சென்றனர். ஞாயிற்றுக்கிழமை 80 ரூபாய் டிக்கெட் ரூ.150-க்கு [...]
|
|
இயக்குனர் மு.களஞ்சியத்துடன் அஞ்சலி
:
|
|
கற்றது தமிழ்தான் அஞ்சலி நடித்து வெளியான முதல் படம். அதில் அவருக்கு நல்ல நடிகை என்ற அறிமுகம் கிடைத்தது. ஆனால் அங்காடித் தெருதான் அவரை ஒரு ஸ்டார் நடிகையாக்கியது. இப்படி இரு படங்களில் அஞ்சலிக்குப் பெயர் கிடைத்தாலும் அவர் முதலில் குட்டுப்பட்டது இயக்குனர் களஞ்சியத்தின் மோதிரக் கையால்தான். பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, பூந்தோட்டம் என பல படங்களை இயக்கியவர்தான் இந்த மு.களஞ்சியம். கற்றது தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பு அஞ்சலி, களஞ்சியம் இயக்குவதாக [...]
|
|
படப்பிடிப்பில் நடிகர் ஆர்.கே. படுகாயம்
:
|
|
எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் தொழிலதிபர் ஆர்.கே. இவர் இப்போது, புலி வேஷம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சதா நடிக்கிறார். இயக்குனர் வாசு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு பங்களாவில் நடந்து வருகிறது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நடிகர் ஆர்.கே., கண்ணாடியை உடைத்துக்கொண்டு பாய்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக கண்ணாடி துண்டுகள் ஆர்.கே.யின் முகம், [...]
|
|