|
ஈ தமிழ்24 பிந்திய செய்திகள் >>>> |
|
:: 24 நேர செய்திகள் [Etamil24.com] ::
|
எதிர்க்கட்சியினரே புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்!
:
|
|
எதிர்க்கட்சியினரே புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தை முன்னெடுக்க பணம் இல்லை என கூறி எதிர்க்கட்சி 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்த்தை முன்னெடுக்க முடியவில்லை எனக்கூறிய எதிர்க்கட்சியினர் புலிகளுக்கு நிதிகளை வழங்கினர். இந்தநிலையில் தமது அரசாங்கம், நிதி பற்றாக்குறை இருந்த நிலையிலும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அபிவிருத்தியையும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை யுத்தம் நிறைவடைந்து விட்ட போதும், [...]
|
|
இடம்பெயர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என இலங்கை இந்தியாவிடம் உறுதி!
:
|
|
இடம்பெயர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது. தற்போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகள் மீளவும் இந்திய வம்சாளித் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ், இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட போது அவர் இதனைத் தெவித்துள்ளார். இந்திய வம்சாவளித் தமிழர்களின் காணிகளை இரர்ணுவத்தினர் பயன்படுத்தி வருகின்ற விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதாக அவர் [...]
|
|
மீள் நிர்மாணப் பணிக்கு இந்தியத் தலையீடு அவசியம் – ரணில்!
:
|
|
இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் இருந்து சென்னை சென்ற எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். கேள்வி:‐ இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவின் இலங்கை சுற்றுப்பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்:‐ நிருபமாராவ் 3 நாள் பயணமாக இலங்கை வந்தார். இலங்கையில் தமிழர்கள் முகாம், அவர்கள் வாழ்கின்ற பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் இலங்கை [...]
|
|
திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு இந்திய அரசு சிறிய ரக பேரூந்து ஒன்றைஅன்பளிப்புச் செய்துள்ளது!
:
|
|
வரலாற்றுப் புகழ் பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு இந்திய அரசு சிறிய ரக பேரூந்து ஒன்றை இன்று அன்பளிப்புச் செய்துள்ளது. இலங்கைக்கு நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தபோது மதியம் இவ்வாலயத்தையும் தரிசித்தார். இவருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், திருகோணமலை அரச அதிபர் மற்றும் திருகோணமலை மாவட்ட சிவில் அதிகாரிகள் உட்பட பலரும் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். அப்போதே இந்திய அரசினால் திருக்கோணேஸ்வரர் [...]
|
|
யாழ்.நகர உணவகங்கள், ஹோட்டல்களில் சுகாதார சீர்கேடுகளைத் தடுக்க 10 சுகாதார பரிசோதகர்கள்!
:
|
|
யாழ்.நகர உணவகங்கள், ஹோட்டல்களில் சுகாதார சீர்கேடுகளைத் தடுக்க 10 சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 55 பொலிஸார் அடங்கிய விசேட குழு நேற்று திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவா தெரிவித்தார். யாழ்.நகரக் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார சீர்கேடுகளைத் தடுத்து மக்கள் மத்தியில் பரவும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காகப் 10 சுகாதார பரிசோதகர்களும் 55 பொலிஸாரும் [...]
|
|
தமிழ்க் கட்சிகளின் அரங்கம்:12 அம்சங்களடங்கிய கோரிக்கை முன்வைத்து நிருபமாராவுடன் பேச்சு!
:
|
|
தமிழ்க் கட்சிகள் அரங்கம் நேற்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவை சந்தித்து 12 அம்ச கோரிக் கைகளை முன்வைத்தது. இந்திய இல்லத் தில் நேற்றுக்காலை சுமார் ஒரு மணித்தி யாலமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்க் கட்சிகள் அரங்கப் பிரதிநிதிகள் இந்திய வெளிவிகார செயலாளரிடம் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிக ளுடன் கூடிய மீள்கட்டுமானம், உயர்பாது காப்பு வலயம் மற்றும் இராணுவ முகாம் களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற இந்தியா உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக [...]
|
:: சினிமா செய்திகள் ::
|
கோலாகலமாக நடந்தது சௌந்தர்யா திருமணம்.
:
|
|
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர். ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. அவருக்கும் பிரபல கட்டுமானத் தொழிலதிபர் ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதியின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமண நிச்சயதார்த்த சடங்குகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது. மணமகள் சௌந்தர்யாவும், [...]
|
|
கார்த்தியின் டபுள்ரோல் சிறுத்தை
:
|
|
பருத்திவீரன் மாஸ்டர் ப்ளாஸ்டர், பையா மேக்கிங்கால் தேறியது, நான் மகான் அல்ல கையை கடிக்காத படம் என்றாலும் கார்த்தியின் கிராப் வேகமாக இறங்கி வருகிறது. இதை மேலே ஏற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கார்த்தி. இதில் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வந்தாச்சு. படத்தை வழக்கம்போல ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜனே தயாரிக்கிறார், கதாநாயகியாக தமன்னா, இசை… வழக்கமாக கார்த்தியை கை தூக்கும் யுவன் இந்த படத்தில் இல்லை, வித்யாசாகர் இசையமைக்கிறார், எடிட்டிங் ஆண்டனி, ஒளிப்பதிவு வேல்ராஜ், பாடல்கள் அறிவுமதி, [...]
|
|
எந்திரனுக்காக காத்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்
:
|
|
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்ட படம் எந்திரன் என்பது ஊரறிந்த செய்தி. இந்த படத்தை காண ஆர்வமாக உள்ளதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் அவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். படத்தை பற்றி அமீர்கான் கூறுகையில்: தான் சிறு வயதிலிருந்தே ரஜினி சார் [...]
|
|
சௌந்தர்யா திருமணத்தை முன்னிட்டு லாரன்ஸ் அன்னதானம்
:
|
|
நடன இயக்குநராக திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் இயக்குநராக வெற்றியடைந்து தற்போது முன்னணி கதாநாயகனாக விளங்கும் ராகவா லாரன்ஸ், இயல்பிலேயே இரக்க மனம் படைத்தவர். அது மட்டுமல்ல சிறு வயதில் பல கஷ்டங்களையும் அனுபவித்தவர். அதன் காரணமாக, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. தற்போது நல்ல நிலையில் இருக்கும் ராகவா லாரன்ஸ், தன்னால் முடிந்த அளவுக்கு சேவைகளை செய்து வருகிறார். லாரன்ஸ் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, தான் குடியிருந்த [...]
|
|
மிட்டாய்க்கு வந்த மிரட்டல்கள்
:
|
|
ஒரு பெண் ஒரே மேடையில் இரு ஆண்களை திருமணம் செய்யும் கதையம்சத்துடனான புதிய படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் அன்புவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் மிட்டாய் என்ற படத்தை இயக்கியிருப்பவர் இயக்குநர் அன்பு. இதில் சந்தோஷ், பிரபா என 2 பேர் நாயகர்களாகவும், மாயா உன்னி நாயகியாகவும் நடித்துள்ளனர். கதைப்படி. சந்தோஷும், பிரபாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் மாயா உன்னியை காதலிக்கின்றனர். மாயா உன்னியும் இருவர் அன்பிலும் நெகிழ்கிறார். நண்பர்கள் [...]
|
|
ரக்த சரித்ராவுக்கு மீண்டுமொரு சிக்கல்!
:
|
|
உண்மைக்குப் புறம்பான காட்சியமைப்புகளுடன் ரக்த சரித்ரா படத்தை எடுத்துள்ளதாகக் கூறி இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திரா ரவுடி பரிதாலா ரவி மற்றும் அவரைக் கொன்ற சூரி ஆகியோரின் உண்மையான கதையை ரக்த சரித்ரா எனும் பெயரில் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கிறார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் பரிதாலா ரவி எனும் பாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்கிறார்கள். [...]
|
:: இந்தியச்செய்திகள் ::
|
செப். 12 முதல் திமுக நிர்வாகிகளுடன் கருணாநிதி சந்திப்பு-கலந்தாய்வு நடத்துகிறார்
:
|
|
சென்னை: முதல்வர் கருணாநிதி மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்துவது என்று திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,கலந்தாய்வுக் கூட்டங்கள் செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.தினமும் 2 கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறும். மாவட்ட, ஒன்றிய, நகரப்
|
|
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
:
|
|
கும்பகோணம்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்றக் கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கும்பகோணம் அருகே உள்ள தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற கவுன்சிலராக இருப்பவர் கணேசன். இவர் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார்.மதுபானக் கடைகளில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கக் கோரி திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ
|
|
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு கட்டாயம் மதிக்க வேண்டும்-கி. வீரமணி
:
|
|
மதுரை: கூட்டணி தர்மம் பாதுகாக்கப்பட்டால் தான் ஆட்சி நிலையாக இருக்கும். எனவே, மாநிலங்களின் உரிமைகளை மதிக்கும் வண்ணம் மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.இது குறித்து தி.க. தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய தலைமைப்
|
|
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா-சரத்குமார் அறிவிப்பு
:
|
|
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா
|
|
கருணாநிதிக்கு சோனியாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்ற கவலை-பினாங்கு துணை முதல்வர் ராமசாமி
:
|
|
பினாங்கு: ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்ற கவலை மட்டுமே தமிழக முதல்வர் கருணாநிதியிடம் அதிகம் இருப்பதாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கூறியிருப்பதாவது, முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை இந்திய அரசைக்
|
|
|
| |
தமிழ்ச்செய்திகள்
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
 |
|
| |
தமிழ்
சஞ்சிகைகள் |
|
|