ஹெரோய்ன் போதைப்பொருளை சர்வதேச ரீதியில் கடத்தும் முயற்சி ஒன்று நேற்று வியாழக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3.5 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதன் சந்தைப்பெறுமதி 3.5 கோடி இந்திய ரூபாய்களாகும். சென்னை மொபுசில் பேரூந்து நிலையத்தில் வைத்து இந்த ஹெரோயன் கைப்பற்றப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அது இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்தது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.